4/21/2011

டோண்டு பதில்கள் - 21.04.2011

pt
கேள்வி-1. what is your comment about the actor vadivelu and his support to DMK?
பதில்: முன்னால் மனோரமா செய்தது போல இவரும் செய்ததை ஏற்கனவேயே குறிப்பிட்டுள்ளதை மீண்டும் நினைவுபடுத்துகிறேன்.

பிரசாரம் செய்யட்டும் அதற்காக திரும்ப வழியில்லாமல் செய்து விட்டாரே என்றுதான் எண்ணுகிறேன். நதியைக் கடந்து வந்ததும் திரும்ப வழியில்லாமல் கடந்து வந்த பாலத்தையே அழிப்பது என்பது போன்ற சொலவடை ஆங்கிலத்தில் உண்டு. யாராவது தெரிந்தால் அதைக் கூறலாமே?

கேள்வி-2. Is it true that all forward caste journals are acting against DMK ,because it is headed by aன் obc?
பதில்: அப்படியானால் மோதிக்கு எதிராக நிலை எடுத்தவர்களும் அதே காரணத்துக்காகத்தான் என கருணாநிதி கூற இயலுமா? மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடும் வேலை அவருக்குத் தேவையா? அது சரி, ராசா பற்றி இப்போ என்ன சொல்லறாராம்?

கேள்வி-3. It is reported in blogs that Being a iyenkar man you are also acting against DMK ?
பதில்: நான் வடகலை ஐயங்கார், சோ ஐயர். மோதி ஓபிசி. இஸ்ரவேலர்கள் யூதர்கள். அதுக்கென்ன இப்போ?

கேள்வி-4. Whether BJP is indirectly supporting DMK?
பதில்: துரதிர்ஷ்டவசமாக இந்தத் தேர்தலை பொருத்து ஆம் என்றுதான் கூற வேண்டும். அதற்காக கட்சிக்கும் அஜெண்டா வேண்டுமே. தனித்து போட்டியிட முயல்வது இப்போதைக்கு கட்டாயத்தால் என்றாலும், எதிர்காலத்தில் தன்னிச்சையான முடிவாக அமைவதே நலம். என்ன, தன் சுய பலம் அறிந்து ஆரம்பத்தில் குறைவான இடத்துக்கு ப்போடியிட்டு அவற்றில் மட்டும் கவனம் செலுத்தி பிரசாராம் செய்திருக்கலாம். பார்ப்போம்.

கேள்வி-5. what will happen, if AIADMK is voted to power ,in respect of cong,dmk relation and 2g scam case?
பதில்: அது ஜெயா நக்ர்த்தும் காய்களைப் பொருத்ததாகும். முதலில் தேர்தலில் வெற்றி பெறட்டும், பார்க்கலாம்.

டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
கேள்வி-6. அமைதியான தேர்தல்: ராமதாஸ் பாராட்டு
pt:first step to jump to other side?

பதில்: தேர்தல் கமிஷனைத்தான் தெரியாத்தனமாகப் பாராட்டி விட்டாரோ என நினைத்து விட்டேன். அப்படி இல்லை போலிருக்கிறதே.

கேள்வி-7. கூட்டணி ஆட்சியும் அமையலாம்: கருணாநிதி
pt: last step to retain allaiance partners with him

பதில்: Whistling in the dark.

கேள்வி-8. தனிப் பெரும்பான்மை கிடைக்கும்: ஜெயலலிதா
pt: final reply to all partners?

பதில்: Overconfident.

கேள்வி-9. திரிணமூல் - காங்கிரஸ் கூட்டணி வாக்கைப் பிரிக்கிறது பாஜக
pt: try to give reason for poll results favourable to CPM ?

பதில்: பாஜக கடக்க வேண்டிய தூரம் அதிகம். சி.பி. எம். பற்றி நான் ஏன் கவலைப்பட வேண்டும்?

கேள்வி-10. தமிழ்ப் புத்தாண்டு: தலைவர்கள் வாழ்த்து
பதில்: கருணாநிதி தோற்று விடுவார் என முடிவே கட்டி விட்டார்களா என்ன?

கேள்வி-11. மம்தாவுக்கு 100 கோடி கறுப்பு பணம்; கம்யூனிஸ்டு குற்றச்சாட்டு
பதில்: சபாஷ் சரியான போட்டி

கேள்வி-12. தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு ஏழை, நடுத்தர மக்கள் கடும் அதிர்ச்சி
பதில்: ஒரு பேச்சுக்கு சொல்கிறேன். தங்கம் வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சி அடைந்தால், பலரைப் பொருத்தவரை அதிர்ச்சி மட்டும் வராது, மாரடைப்பே வந்து விடும்.

கேள்வி-13. ரஜினிகாந்த் 2 தவறுகளை செய்துவிட்டார் : எஸ்.வி.சேகர்
பதில்: அதாவது, அனைவரையும் வைத்துக் கொண்டு வாக்குபதிவு செய்தது.வாக்குபதிவு செய்தவுடன் மாற்றம் தேவை என மக்கள் மத்தியில் முடிவு எடுத்ததாக கருத்து தெரிவித்தது. இதைத்தானே குறிப்பிடுகிறீர்கள்? ஆம், அவர் செய்தது தவறுதான்.

கேள்வி-14. இதுவரை இல்லாத அளவு வாக்குப்பதிவு ஏன்?
பதில்: தேர்தல் கமிஷனின் நேர்மையான செயல்பாட்டுக்கு இது ஒரு சாட்சி.

கேள்வி-15. வடிவேலு, குஷ்பூ பேசும் அளவிற்கு நிலைமை மோசமாகியுள்ளது : நாஞ்சில் சம்பத்
பதில்: வடிவேலு தெரியும், குஷ்பு தெரியும். யார் இந்த நாஞ்சில் சம்பத்?

ரமணா
16. வைகோவுக்கு ஜெயலலிதா செய்தது துரோகமில்லையா?
பதில்: துரோகமல்ல, முட்டாள்தனம்.

17. இதற்குப்பிறகும் வைகோவின் நடு நிலை இந்தத் தேர்தலில் அவர் அரசியல் செல்வாக்கை கூட்டுமா?
பதில்: கூட்டும் என நம்புவதுதான் அவருக்கு இருக்கும் ஒரே ஆறுதல்.

கேள்வி-18. கல்லூரி மாணவர்களிடையே தேமுதிக தலைவர் மேல் நம்பிக்கை உள்ளதாய் தெரிகிறதே?
பதில்: எந்த மாணவர்கள்? சின்னி ஜெயந்த், விவேக், மற்ற எவர்கிரீன் சினிமா மாணவர்கள்?

19. அதிமுக,தேமுதிக கூட்டணியால் யாருக்கு அதிக லாபம்?
பதில்: கூட்டணி வெற்றி பெர்று, இருவருக்குமே கணிசமான அளவில் சீட்டுகள் வந்தால் இருவருக்குமே லாபம். வேறு எந்த காம்பினேஷனிலும் கூட்டணி உடைவது நிச்சயம். இருவரது ஈகோக்களையும் பார்க்கும்போது கூட்டணி தேறுவது முதலிலேயே சந்தேகம்தான்.

20. தேமுதிகவின் தலைவி பிரேமலதாவின் பிரச்சாரத்திற்கு மக்களிடம் வரவேற்பு எப்படி?
பதில்: வரவேற்பு ஓட்டுகளாக மாறாத வரையில் அதற்கு எந்தப் பலனும் இருக்காது

21. நடிகர் விஜய்யின் திரைஉலக வாழக்கை என்னவாகும்?
பதில்: ஏன், என்னாச்சு?

கேள்வி-22. வடிவேலுவின் கதி?
பதில்: முதல் கேள்வியைப் பார்க்கவும்.

கேள்வி-23. ரஜினி அதிமுகவுக்கு ஓட்டு போட்டதாய் வரும் செய்திகளினால்?
பதில்: சம்பந்தப்பட்ட பூத் அதிகாரிக்கு தலைவலி வரலாம், எப்படி புகைப்படம் அந்த இடத்தில் எடுக்க அனுமதிக்கப்பட்டது என.

24. ஸ்டாலினுக்கு இந்தத் தடவையாவது சான்ஸ் கிட்டுமா?
பதில்: கஷ்டம்தான், அழகிரி செயலாக இருக்கும் வரை

25. ஒருவேளை திமுக தோற்றால் அழகிரியின் கோபம் யார்மீது திரும்பும்?
பதில்: ஸ்டாலின் மீது?

thenkasi
கேள்வி-26.தேர்தலில் யார் வெற்றி பெறுவார்களோ அவர்களை உயர் அதிகரிகள் சந்திக்கிறார்கள் என வரும் செய்தி உண்மையா?
பதில்: வழக்கமாக நடப்பதுதானே.

கேள்வி-27. தேர்தல் கமிஷன் கெடுபிடி இல்லை என்றால் 2000 கோடி வரை புழங்கியிருக்குமாமே?
பதில்: இப்போது அதில் பெருந்தொகை வேட்பாளர்கள் இடத்தில் பதுங்கியுள்ளதாக சிலர் கூறுகிறார்களே.

கேள்வி-28. ஜெயலலிதா ஆட்சிக்கு வருவார் என பிராமணர்கள் செய்தி பரப்புகின்றனர் எனும் திமுகவின் அபாண்ட குற்றச்சாட்டு பற்றி?
பதில்: அதுதான் நீங்களே அபாண்டம் எனக் கூறிவிட்டீர்களே.

கேள்வி-29. இனி இந்துக் கோவில்களுக்கு நல்ல காலமா?
பதில்: இத்தேர்தலில் மதம் ஒரு பாத்திரமும் வகிக்கவில்லை என நினைக்கிறேன்.

கேள்வி-30. முஸ்லீம்கள் ஓட்டு வங்கி எப்படி திசை மாறியது இந்தத் தேர்தலில்?
பதில்: இக்கேள்விக்கான ஒரு ஆதாரத்தையும் நான் பார்க்கவில்லையே.


மேலும் கேள்விகள் வந்தால் மீண்டும் சந்திப்போம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

25 comments:

pt said...

டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
1. தமிழகமே பற்றி எரியும்:கே.வி.தங்கபாலு
2.ஏழ்மையை ஒழிப்பதில் இந்தியா முன்னேற்றம்
3. ஒரு ஊழலுக்கு மாற்று இன்னொரு ஊழலா?
4. கலக்கிய தேர்தல் கமிஷன்... கலங்கிய கட்சிகள்...!
5.அலிக்கு உதவிய கவர்னர் ராஜினாமா?

hayyram said...

// வைகோவுக்கு ஜெயலலிதா செய்தது துரோகமில்லையா?// ஓட்டு சதவீதத்துக்கு தகுந்த மாதிரி தான் சிட்டு குடுக்க முடியும். வைகோவுக்கு ரோஷம் இருக்கும் அளவிற்கு ஓட்டில்லையே.

ezhil arasu said...

//hayyram said...

/ // வைகோவுக்கு ஜெயலலிதா செய்தது துரோகமில்லையா?// ஓட்டு சதவீதத்துக்கு தகுந்த மாதிரி தான் சிட்டு குடுக்க முடியும். வைகோவுக்கு ரோஷம் இருக்கும் அளவிற்கு ஓட்டில்லையே.///

வைகோ,தலைவர் கலைஞரின் திமுகழகத்தில் மீண்டும் இணைந்து செயல்பாடுவார்.
தமிழினம் காக்கும் போரில் தலைவனும் தொண்டனும் மீண்டும் கை கோர்க்கும் புனித,தியாகத் திரு நாளுக்கு உலகெங்கும் வாழும் தமிழினம் காத்திருக்கிறது.
இனி ஆதிக்க சக்திகளுக்கு கெட்ட காலம்தான்.
பார்ப்பன தொண்டரடிப்பொடியாழ்வார்களின் கதியை நினைத்தால் !
தளபதி ஸ்டாலினுக்கு போர்வாளாய் செயல்படுவார் வைகோ
தென் மண்டல காப்போன்
அழகிரிக்கு பக்கபலமாய் மாறும் வைகோவின் அரசியல் எதிர்காலம் மீண்டும் பிரகாசம்.
தமிழ் சமுதாயத்திற்கு இனி விடியல்தான்.
ராஜராஜ சோழனின் தொடரும் நல்லாட்சிக்கு பாதுகாவலன் இனி வைகோதான்.
சிங்கநாதம் தொடரட்டும்.

ஞாஞளஙலாழன் said...

16. வைகோவுக்கு ஜெயலலிதா செய்தது துரோகமில்லையா?
>பதில்: துரோகமல்ல, முட்டாள்தனம்.

இரண்டும் தான் என்பது எனது கருத்து.

Itsdifferent said...

There is a very healthy discussion Narendra Modi in Raman's blog. Raman wrote a blog indicating NaMo's achievements, and asserted that Youth should rally behind him, to enable to get a national level prominence. And there you go, flood of emails. But very healthy discussion, not like the one we would see in Tamil Blogs.
http://ramanstrategicanalysis.blogspot.com/

ரவிஷா said...

//கேள்வி-8. தனிப் பெரும்பான்மை கிடைக்கும்: ஜெயலலிதா
pt: final reply to all partners?
பதில்: Overconfident.
//
Overconfidence என்றுதானே வரணும்!

Arun Ambie said...

பதினைந்தாம் கேள்விக்கான பதில் சூப்பரோ சூப்பர்!!

Arun Ambie said...

For டோண்டு பதில்கள்:
http://www.thehindu.com/news/national/article1716171.ece
காந்திநகர் நகராட்சித் தேர்தலில் காங்கிரசு வென்று விட்டதாம். இது மோடிக்கு பின்னடைவு, மரண அடியின் முதல் படி என்று கொக்கரிப்போர் பற்றி....

Yet, மோடி சற்றே introspect செய்வதில் தவறில்லை என்பது குறித்த உங்கள் பார்வை??

dondu(#11168674346665545885) said...

////கேள்வி-8. தனிப் பெரும்பான்மை கிடைக்கும்: ஜெயலலிதா
pt: final reply to all partners?
பதில்: Overconfident.
//
Overconfidence என்றுதானே வரணும்!//

In such cases of doubt, you can complete the sentence and see.
My answer implies Jaya is "overconfident", matching with Karunanithi is "whistling in the dark"

See these two sentences?
1. She likes me more than him.
2. She likes me more than he.

Both are correct in themselves, the meaning implied is more important. How?

1. She likes me more than (she likes) him.
2. She likes me more than he (likes me).

Unfortunately, people use the sentence 1 also to imply the sentence 2.

This nuance difference was brought home to us by our 8th Standard teacher the late Shri Jayarama Iyengar (God bless his soul) recently in the academic year 1958-59, when I was studying in Hindu High School, Triplicane, Chennai-5.

Regards,
Dondu N. Raghavan

pt said...

டோண்டு சாரின் ஸ்பெஷல் விமர்சனம்?
6.தேர்தல் ஆணையத்தின் அதிகாரத்தை ஜெயலலிதா எடுத்துக் கொண்டாரா? கலைஞர் கேள்வி
7.பழ. நெடுமாறன் மீது கலைஞர் வழக்கு
8.கலைஞர் ஓய்வெடுக்கும் ரிசார்ட்டில் ஸ்டாலின் ஓய்வு
9.இருட்டுக்கடை அல்வா என்ற பெயரில் வேறு யாரும் கடை நடத்த தடை: நெல்லை கோர்ட்
10.தமிழ் பெண்களின் கற்பு குறித்து பேட்டி: நடிகை குஷ்பு மீதான வழக்கு ஒத்திவைப்பு

ராம்ஜி_யாஹூ said...

பதிவர் நரசிம் அவர்களின் பண, நட்பு விவகாரங்கள் குறித்து உங்களின் கருத்து என்ன . புதிய பதிவர்கள், பஸ்சர்கள், த்விட்டர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன

thenkasi said...

1)மறுஜென்மம் பற்றிய தங்களின் அபிப்பிராயம்?
2)மானிட இனத்தில் இறப்புக்குப் பின்னால் உயிர் செல்லும் இடம் யாது?
3)மனித உடலில் உயிர் பிரிந்தபின் உடலின் எடை 5 கிலோ குறைகிறதாம்-அப்படியென்றால் ஆத்மா பற்றிய நம்பிக்கை சரிதானே?
4)இப்பிறவியில் சரியில்லாமல் நெறிமுறை தவறி வாழும் மனிதர்களில் சிலர் செல்வச் செழிப்போடு ஆனந்தமாய்,ஆர்ப்பாட்டமாய் வாழ்வதற்கு காரணம் அவர்கள் போன பிறவியில் செய்த நற் செயல்களா?
5)நான்காவது கேள்வியில் சொல்லப்டும் நபர்களில் , உடன் உங்கள் கவனத்துக்கு முதன்மையாய் வருவது யார்?
6)வாழும் யோகிகளில் யோக்கிமானவர் யார்?
7)யோகக் கலை பற்றிய ஆர்வம் ஏகமாய் பரவுதன் காரணம் மன அழுத்தமா?
8)எல்லாம் பிரம்மம் எனும் எண்ணம் மக்களுக்கு முழுமையாய் வந்துவிட்டால்?
9)கடவுள் பெருமாள் உங்கள் முன்னால் காட்சி தந்தால் என்ன வரம் கேட்பீர்கள்?
10)வேற்று கிரக இறந்த மனிதன் பற்றிய பிரபல வீடியோ பற்றி உங்கள் கருத்து?

dondu(#11168674346665545885) said...

@ராம்ஜி_யாஹூ
உங்கள் கேள்விக்கு தனியாக இப்போதுதான் எனது நங்கநல்லூர் பஞ்சாமிர்தம்-22.04.2011 பதிவில் கூறியுள்ளேன்.

பார்க்க: http://dondu.blogspot.com/2011/04/19042011.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

Arun Ambie said...

//ராஜராஜ சோழனின் தொடரும் நல்லாட்சிக்கு பாதுகாவலன் இனி வைகோதான்.
சிங்கநாதம் தொடரட்டும். //

ராஜராஜ சோழன் தன் ஆட்சியைப் பாதுகாத்துத் தொடர ராஜேந்திர சோழனை நம்பினான். பாண்டியனையோ சிங்களனையோ சத்தியாசிரியனையோ பார்த்து வரிப்புலியே ஓடியா! ஓடியா!! என்று கூவவில்லை.

இது தவிர ராஜராஜன் குடவோலை முறையில் பணம் கொடுத்து ஓலை பெற்றதாக வரலாறு இல்லை. சோழநாடு சோற்றுக்குச் சிங்கியடித்தாலும் தன் மகள் குந்தவை குந்தித்தின்ன குன்றளவு செல்வம் சேர்த்து வைக்கவில்லை.

ஐயா எளிலரசு! கொஞ்சம் லாஜிக்கோட பேசுங்கன்னு சொல்லவும் முடியாது ஒங்ககிட்ட ஏன்னா திமுககாரன் எவனும் லாஜிக் பாக்கறதில்லை. ஒங்களுக்குப் புரியர மாதிரி சொன்னா பகுத்தறிவோட யோசிக்கிறதில்லை. இல்லாட்டி இப்படி கட்சி மொத்தத்தயும் ஒரு குடும்பத்துகிட்ட அடகு வெச்சுட்டு நாட்டையும் பலியாக்கத் துடிப்பீங்களா?

நிலைமை இப்படி இருக்க ராஜராஜ சோழனை ஏன் அசிங்கப்படுத்துகிறீர்கள் என்பது தான் புரியவில்லை.

ரவிஷா said...

//In such cases of doubt, you can complete the sentence and see.
My answer implies Jaya is "overconfident", matching with Karunanithi is "whistling in the dark"

See these two sentences?
1. She likes me more than him.
2. She likes me more than he.

Both are correct in themselves, the meaning implied is more important. How?

1. She likes me more than (she likes) him.
2. She likes me more than he (likes me).

Unfortunately, people use the sentence 1 also to imply the sentence 2.

This nuance difference was brought home to us by our 8th Standard teacher the late Shri Jayarama Iyengar (God bless his soul) recently in the academic year 1958-59, when I was studying in Hindu High School, Triplicane, Chennai-5.

Regards,
Dondu N. Raghavan
//

Wow! Thanks.

ezhil arasu said...

//Arun Ambie said...

//ராஜராஜ சோழனின் தொடரும் நல்லாட்சிக்கு பாதுகாவலன் இனி வைகோதான்.
சிங்கநாதம் தொடரட்டும். //

ராஜராஜ சோழன் தன் ஆட்சியைப் பாதுகாத்துத் தொடர ராஜேந்திர சோழனை நம்பினான். பாண்டியனையோ சிங்களனையோ சத்தியாசிரியனையோ பார்த்து வரிப்புலியே ஓடியா! ஓடியா!! என்று கூவவில்லை.

இது தவிர ராஜராஜன் குடவோலை முறையில் பணம் கொடுத்து ஓலை பெற்றதாக வரலாறு இல்லை. சோழநாடு சோற்றுக்குச் சிங்கியடித்தாலும் தன் மகள் குந்தவை குந்தித்தின்ன குன்றளவு செல்வம் சேர்த்து வைக்கவில்லை.

ஐயா எளிலரசு! கொஞ்சம் லாஜிக்கோட பேசுங்கன்னு சொல்லவும் முடியாது ஒங்ககிட்ட ஏன்னா திமுககாரன் எவனும் லாஜிக் பாக்கறதில்லை. ஒங்களுக்குப் புரியர மாதிரி சொன்னா பகுத்தறிவோட யோசிக்கிறதில்லை. இல்லாட்டி இப்படி கட்சி மொத்தத்தயும் ஒரு குடும்பத்துகிட்ட அடகு வெச்சுட்டு நாட்டையும் பலியாக்கத் துடிப்பீங்களா?

நிலைமை இப்படி இருக்க ராஜராஜ சோழனை ஏன் அசிங்கப்படுத்துகிறீர்கள் என்பது தான் புரியவில்லை.//

ராஜராஜ சோழனின் மறுபதிப்புதான் தலைவர் கலைஞர்.
செம்மொழி மாநாட்டில் வைக்கப்பட்டிருந்த செப்புப் பட்டயங்களே சாட்சி.
ஊடகங்கள் மூலம் அவாளின் புழுகு மூட்டை பெய் பித்தலாட்ட பிர்ச்சாரங்கள் எல்லாம் காற்றில் கரையும் காயமாய் மாறப் போவதை தமிழ் சமுதாயம் பார்க்க போகும் பொன்னாள் தான் 13-5-2011.


திமுக,காங் லட்சிய முற்போக்கு கூட்டணியின் ஆட்சி தொடர வாழ்த்துவோம்.
2016லும் ஏன் 2021 லும் கலைஞர்தான் முதல்வர்.
எந்தக் கொம்பன் நினத்தாலும் இது தான் இங்கே எழுதப் படாத சட்டம்.
தருமனின் ஆட்சிமீது தமிழ் சமுதாயத்தின் நம்பிக்கை வேர்விட்டு விருட்சமாய் வளர்ந்திருப்பதுகண்டு காழ்ப்புணர்ச்சி கொண்டு செயல்படுவோர் காலம் இங்கே இனி செல்லாது.

thenkasi said...

ezhil arasu said...


ராஜராஜ சோழனின் மறுபதிப்புதான் தலைவர் கலைஞர்.
செம்மொழி மாநாட்டில் வைக்கப்பட்டிருந்த செப்புப் பட்டயங்களே சாட்சி.
ஊடகங்கள் மூலம் அவாளின் புழுகு மூட்டை பெய் பித்தலாட்ட பிர்ச்சாரங்கள் எல்லாம் காற்றில் கரையும் காயமாய் மாறப் போவதை தமிழ் சமுதாயம் பார்க்க போகும் பொன்னாள் தான் 13-5-2011.//

ஒரு தவறு செய்தால் அதைத் தெரிந்து செய்தால்
அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்
உடல் உழைக்கச் சொல்வேன் அதில் பிழைக்கச் சொல்வேன்
அவர் உரிமைப் பொருள்களைத் தொடமாட்டேன் (2)




இங்கு ஊமைகள் ஏங்கவும் உண்மைகள் தூங்கவும் நானா பார்த்திருப்பேன்
???? எதிர்காலம் வரும் என் கடமை வரும் இந்தக் காக்கைகள் கூட்டத்தை ஒழிப்பேன்
???? வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்
வரும் நல்லோர் முகத்திலே விழிப்பேன்.

2G scam: Kanimozhi’s name may figure in second charge sheet
Published: Thursday, Apr 21, 2011, 23:27 IST | Updated: Thursday, Apr 21, 2011, 23:28 IST
By DNA Correspondent | Place: New Delhi | Agency: DNA

With all nine accused named in the first charge sheet of multi-crore 2G scam behind the bars, the Central Bureau of Investigation is all set to file its first supplementary chargesheet on Monday, April 25.

According to CBI officials, second charge sheet will have details of the kickbacks of the 2G scam and names of family members of Tamil Nadu chief minister M Karunanidhi.

Sources claimed that the second chargesheet will focus on Rs214 crore transaction involving Kalaignar TV and the alleged payoff routed through Dynamix Realty, Kusegaon Realty and Cineyug Films.

The CBI is likely to name DMK patriarch M Karunanidhi’s daughter Kanimozhi, Kalaignar TV managing director Sharad Kumar, Asif Balwa and Rajiv Agarwal of Mumbai based DB Realty and Cineyug Films’ Karim Morani among others.
courtesy-http://www.dnaindia.com/india/report_2g-scam-kanimozhis-name-may-figure-in-second-charge-sheet_1534686

Arun Ambie said...

//ராஜராஜ சோழனின் மறுபதிப்புதான் தலைவர் கலைஞர்.//
ராஜராஜ சோழன் என்ன புத்தகமா மறுபதிப்பு போட?

Arun Ambie said...

for டோண்டு பதில்கள்:
மறுஜென்மத்தை ஏற்றாலும் அதை மறுபதிப்பு என்று சொல்லி மீசையில் மண் ஒட்டவில்லை என்று இறும்பூது எய்தும் போலி பகுத்தறிவு ஜென்மங்கள் பற்றி உங்கள் கருத்து என்னவோ?

பெசொவி said...

//நதியைக் கடந்து வந்ததும் திரும்ப வழியில்லாமல் கடந்து வந்த பாலத்தையே அழிப்பது என்பது போன்ற சொலவடை ஆங்கிலத்தில் உண்டு. யாராவது தெரிந்தால் அதைக் கூறலாமே?//

Burn one's bridges

D. Chandramouli said...

One Raghavachary was my class teacher in Hindu High School when I studied IV Form Section K (9th Std) there. He was a very kind teacher. I recall an occasion when all our class students went to the teacher's house close to school when his father-in-law had passed away. Even in I Form (6th Std), the same Raghavachary used to be my teacher for one subject. Actually, I couldn't have been promoted to II (7th)Form but for his generosity in adding grace marks in Maths! He once asked me to get out of the class for some of my pranks. Even outside the room, I was making joke about some students. He called me in and slapped me. During the same period, I happened to be the only one who could correctly answer a difficult question on social studies. At the end of the period, he hugged and embraced me. I fondly remember him even today. Well, those days, the teachers were our extended family, and they exerted strong moral influence on us.

dondu(#11168674346665545885) said...

@Chandramouli
Which year did you pass out of Hindu High School? By the way, do you mean HHS of Triplicane, my school?

I passed out in 1962.

The one Raghavachari I could remember is Shri. V. N. Raghavachary (called on VNR). He took Social Studies for my class in 10th and 11th Standards. Do you refer to him in your comment?

Regards,
Dondu N. Raghavan

dondu(#11168674346665545885) said...

//Burn one's bridges//
Right on the dot.

Regards,
Dondu N. Raghavan

D. Chandramouli said...

I studied in HHS, Triplicane. Yes, VN Raghavachari was my class teacher in IV Form (9th)Section K, and he also took Social Studies. In I Form (6th), VNR took a different subject. Only those two years, I studied in HHS. In IV Form, one Kuppu Rao was my math teacher, who used to scold the boys: "If I kick you with my boots, you will fall into the Bay of Bengal"! In all my academic life, I can recall only these two teachers! My SSLC book was first signed by Headmaster of HHS, Mr. KP Srinivasa Varadhan (who, later, became an MLC under teachers' quota). My two elder brothers and my cousin brother D. Narayanaswamy (one of the founders of Viveka Fine Arts - the 'producer' in serial 'Engay Brahmanan;) all had their education up to SSLC in HHS, Triplicane. After my SSLC in Tiruvarur, I returned to Madras and pursued Typewriting, Shorthand etc in Krishna Institute of Commerce, next to HHS in Big St, and passed out with a Diploma in Commerce with Higher Grades in 6 subjects. Thanks to you, I could recall my kind teacher VNR with gratitude.

dondu(#11168674346665545885) said...

@சந்திரமௌளி
நீங்கள் என்னைவிட வயதில் பெரியவராக இருந்திருக்க வேண்டும். எந்த ஆண்டு பள்ளியிறுதி வகுப்பு என்பதைக் கூறவேயில்லையே.

ஆறாம் மற்றும் ஒன்பதாம் வகுப்புகள் மட்டும் இந்து உயர்நிலை பள்ளியா? வியப்பாக இருந்திருக்கிறது. அடிக்கடி பள்ளி மாறியிருந்திருக்கிறீர்கள்.

தலைமை ஆசிரியர் கே.பி. ஸ்ரீனிவாச வரதன் இல்லை, டி.பி. ஸ்ரீனிவாச வரதன் (டிபிஎஸ் அல்லது திரிபுர சுந்தரி என மாணவர்களால் அன்புடன் அழைக்கப்பட்டார்).

குப்பு ராவ் அவர்களை எனக்கு நினைவிருக்கிறது. உதைக்கற உதையில் பே ஆஃப் பெங்காலிலே போய் விழுவே என அவர் கூறியதும் நினைவில் உள்ளது.

என்னுடைய இந்தப் பதிவையும் பார்க்கவும், http://dondu.blogspot.com/2009/09/04092009.html

அன்புடன்,
டோண்டு ராகவன்

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது