12/29/2009

சோவின் எங்கே பிராமணன் பார்ட் - 2 (எபிசோட்கள் - 9 & 10)

எபிசோட் - 9 (28.12.2009) சுட்டி - 1 & சுட்டி - 2
சாம்பு சாஸ்திரிகளின் மனைவி அசோக்கிடம் அவன் அவசரப்பட்டு தன் முடிவை எடுத்ததாகக் கூறுகிறார். வைதிக பிராமணனாக வாழ்வதில் உள்ள கஷ்டங்கள் தனக்கு தெரியும் எனவும் கூறுகிறார். சாம்பு சாஸ்திரிகளும் அதை ஆமோதிக்கிறார். தான் பரம்பரையாகவே தொடர்வதால் அவ்வளவு கஷ்டம் உணரவில்லை, மேலும் தனக்கு வேறுவழியில்லை என்றும் ஆனால் அசோக் வசதியான குடும்பத்தில் பிறந்து கஷ்டமில்லாத வாழ்க்கை வாழ்ந்ததால் அவனால் இந்த கஷ்டங்களை சமாளிக்க முடியாது என சாம்பு சாஸ்திரிகள் கவலைப்படுகிறார். கடலில் நீந்துவதற்காக குதித்த பிறகு கரை தரும் பாதுகாப்பு பற்றி கவலைப்பட்டு என்ன பயன் என கேட்கிறான். அப்படியானால் அவனுக்கு ஆசி கூறுவதைத் தவிர தனக்கு வேறுவழியில்லை என சாம்பு சாஸ்திரிகள் கூறுகிறார். ஆச்சார்யனின் இலக்கணம் பற்றி அசோக் கேள்வி கேட்க, சாத்திரங்களை நன்கு கற்றுணர்ந்து, அவற்றை பிறருக்கு கற்பித்து, தானும் அவை கூறியதன்படி நடப்பன் எவனோ அவனே ஆச்சார்யன் என சாம்பு கூறுகிறார்.

அதாவது ஆச்சார்யன் மற்றவருக்கு உதாரணமாக இருக்க வேண்டுமா என சோவின் நண்பர் கேட்க, ஆம் என அழுத்தந்திருத்தமாக சோ விடையளிக்கிறார். சாம்பு சாஸ்திரிகள் சொன்னதையே அவரும் திரும்பக்கூறுகிறார். ஆனால் குரு என்பவர் ஒரு படி மேலே. அவர் தன் பார்வையாலும், தொடுகைஆலும் மனத்தாலுமெ சீடனுக்கு அருள் செய்ய முடியும் எனக்கூறுகிறார். அதற்கு உதாரணமாக சிஷ்யனுக்கு கடுமையான பரீட்சையை வைத்த ஒரு குரு அவன் எல்லாவற்றிலும் தேறியது கண்டு மகிழ்ந்து அவனுக்க் எல்லா அறிவையும் ஒரே ஸ்ட்ரோக்கில் அளிக்கிறார்.

குருகுலவாசம் பற்றியும் பேசுகிறார். அதன் நியமங்களை விவரிக்கிறார். பிட்சை எடுக்கச் செய்வதின் சூட்சுமத்தை விளக்குகிறார். இதே மாதிரி ஃப்ரீ மேசன்களும் செய்வதாக தான் கேள்விப்பட்டதைக் கூறுகிறார். புதிதாக வரும் அங்கத்தினர் நிஜமாகவே பிச்சை எடுக்க வேண்டும் என விதி இருப்பதாகவும் தான் கேள்விப்பட்டதாகக் கூறுகிறார். நண்பர் இலவசக் கொத்தனார் இதை உறுதி செய்யணும்னு கேட்டுக் கொள்கிறேன்.

அசோக் சாம்பு சாஸ்திரிகளை தனக்கு ஆச்சார்யனாக இருக்குமாறு வேண்ட, அவர் பதறிப்போய் தனக்கு அத்தகுதி இல்லை என மறுக்கிறார். ஆனால் அசோக் அவருக்கு தகுதிகள் உண்டு என வாதங்களை முன்வைத்து அவரைத் தன் கோரிக்கைக்கு ஒத்துக் கொள்ளச் செய்கிறான். அவரிடம் ஆசிபெறுகிறான்.

நாதன் வீட்டில் சமையற்கார மாமி அவரிடம் தயக்கத்துடன் தனக்கு அசோக் அவன் திருவண்ணாமலைக்கு செல்வதற்கு முந்தைய தினம் ஒரு அன்னபூரணி விக்கிரகத்தைத் தந்ததாகவும் உலகத்துக்கே அன்னம் அளிக்கும் அன்னபூரணியின் அந்த விக்கிரகத்துக்கு தினம் ஒரு பூவால் அர்ச்சனை செய்யும்படி கூறியதாகவும் சொல்கிறாள்.

அதென்ன அன்னபூரணி கதை, சோறு வேண்டும் என்றால் தருவாளா என என சோவின் நண்பர் கேட்க, அவரும் சோறுதான் வேண்டும் என இருந்து அதை பக்தியுடன் கேட்க அதையும் தருவாள் எனக் கூறுகிறார். ஆனால் ஆதி சங்கரர் வேண்டியதே வேறு ரேஞ்சில் எனவும் கூறுகிறார். அவர் ஞானத்தையும் வைராக்கியத்தையும் வேண்டிக் கேட்கிறார். அன்னை பார்வதி, தந்த சிவன், பந்துக்கள் சிவபக்தர்கள் என்றும் அவர் கூறுகிறார். சிவனுக்கே பிரும்மஹத்தி தோஷம் வர அதையும் அன்னபூரணிதான் நீக்கினார் என்றும் கூறுகிறார்.

நாதன் தன்னிடம் இதை ஏன் முதலிலேயே சொல்லவில்லை என கோபிக்கிறார். அப்போது அவர் பம்பாயில் இருந்தார், ஆகவே சொல்லியிருந்தாலும் அவரால் என்ன செய்திருக்க முடியும் என சமையற்காரமாமி கேட்க, தான் என்னென்னவெல்லாம் செய்திருக்கக்கூடும் என்பதை நாதன் பட்டியலிடுகிறார். கோபத்துடன் கத்தி முடிந்தபிற்கு வசுமதிக்கு இதை தெரியப்படுத்தாமல் இருப்பதே நலம் என அவர் கூறுகிறார்.

பாகவதரை அவரது வீட்டில் சந்திக்கிறான் அசோக். நாதனும் அசோக்கைப் பார்த்து அவ்வாறு கூறியிருக்க வேண்டாம் எனவும், அசோக்கும் அதை அப்படியே வேதவாக்காக எடுத்துக் கொண்டு வீட்டை விட்டு போயிருக்கக்கூடாது எனவும் பாகவதர் கூறுகிறார். மேலேயிருந்து ஒரு சக்திதான் தன்னை செலுத்துகிறது என அசோக் கூற, பாகவதரும் அதை புரிந்து கொள்கிறார்.

தன் முந்தைய பிறவிகளில் புண்ணியம் செய்ததாலேயே பாகவதர் தனக்கு இப்பிறவியில் ஆசானாகக் கிடைத்ததாகவும், அவர் தன்னை ஆசீர்வதிக்க வேண்டும் என்றும் அசோக் கூறுகிறான். தான் துடுப்பில்லாத படகு போல இருப்பதாகவும் நல்லபடியாக கடலைக் கடந்து இலக்கை அடைய தனக்கு அவர் ஆசி தேவை என்றும் அவன் கூறுகிறான். உணர்ச்சிவசப்படும் பாகவதர் அவனுக்கு துடுப்புகள், வழிகாட்டிகள் ஆகியவை எப்போதுமே கிடைக்கும், அதற்காக தனது ஆசிகள அவனுக்கு எப்போதுமே உண்டு எனக்கூறுகிறார்.
(தேடுவோம்)

எபிசோட் - 10 (29.12.2009) சுட்டி - 1 & சுட்டி - 2
வேம்பு சாஸ்திரிகள் வீட்டுக்கு அசோக் வருகிறான். அவர் மனைவி சுப்புலட்சுமிக்கு முதலில் அவனை அடையாளம் தெரியவில்லை. பிறகு புரிந்து கொள்கிறார். வேம்பு சாஸ்திரி அசோக்கின் மாற்றத்தைக் கண்டு திகைக்கிறார். அவருடன் உமாவின் சீமந்தத்தன்று தான் மேற்கொண்ட விவாதம்தான் தனது இந்தக் கோலத்துக்கு காரணம் என அசோக் கூற அவர் திடுக்கிடுகிறார். தான் அன்று ஏதோ ஆவேசத்தில் கூறியதாகவும் அதையெல்லாம் அசோக் சீரியஸாக எடுத்துக் கொல்ளக்கூடாது எனவும் கூறுகிறார். அசோக் தன்னிடம் கடற்கரையில் ஒரு சன்னியாசியும் தான் வர்ணரீதியான பிராமணனை வெளியில் தேடக்கூடாது என்றும் தனக்குள்ளேயே தேட வேண்டும் என்றும், அதை மனது ஒத்துக்கொண்டாலும் சற்றே தயங்கியதாகவும் ஆனால் வேம்பு சாஸ்திரிகள் சொன்னதுதான் தன்னை உண்மையிலேயே அந்தத் தேடல் பாதையில் செலுத்தியது என்றும் அசோக் கூறி வேம்பு சாஸ்திரிகளிடமிருந்து ஆசியும் பெறுகிறான்.

நாதன் சமையற்கார மாமியிடம் தான் அவளை கோபித்து கொண்டதற்காக மன்னிப்பு கேட்கிறார். பிறகு அவளது கணவரைப் பற்றி விசாரிக்க, அவர் ஏதோ ஹோட்டல் நடத்த நிச்சயம் செய்ததாகக் கூறுகிறார். தன்னுடனேயே வந்து ஹோட்டலில் சமையல் செய்ய வருமாறு அவர் கூப்பிடுவதாகச் சொல்ல, நாதன் திடுக்கிடுகிறார். அவளது சேவையை இழக்க விரும்பாததால் அவள் கணவருக்கு தன் ஆஃபீசிலேயே வேலை போட்டுத் தருவதாகவும் கூறுகிறார்.

அசோக் இப்போது சாரியாரின் வீட்டுக்கு செல்கிறான். அவரும் அவனிடம் இந்த மாற்றம் பற்றிக் கேட்கிறார். அசோக் கடற்கரையில் நடந்ததைக் கூறுகிறான். அவரோ யார் யார் சொல்வதையோ கேட்டுக் கொண்டிருக்க வேண்டாம், ஏனெனில் இந்த யுகத்தில் வர்ணரீதியான பிராமணனாக வாழ முடியாது எனக்கூறுகிறார். நடக்க முடியாததை முயற்சி செய்ய வேண்டாம் எனவும் கூறுகிறார்.

ஏன் முடியாது என்பதைத்தான் தான் காணப்போவதாக அசோக் கூற, கேள்வியிலேயே பதிலுமா என சாரியார் கேட்கிறார்.

அதெப்படி கேள்வியிலேயே பதில் வரவியலும் என சோவின் நண்பர் கேட்க, ஏன் முடியாது என்னும் எதிர்க்கேள்வியால் அது முடியும் என்னும் பதிலையும் இம்ப்ளை செய்கிறார். பிறகு ஸ்வேதகேது என்பவனுக்கு அவன் தந்தை உத்தாலகர் கேள்விகள் மூலமே உபதேசம் செய்ததையும் கூறுகிறார். ஆலம்பழவிதை, தண்ணீரில் கரைந்த உப்பு ஆகியவற்றை வைத்து ஆத்ம விசாரணையை விளக்குகிறார்.

அசோக் எடுத்த முடிவுக்கு அவன் பெற்றோர்கள் சம்மதம் தந்தார்களா என சாரியார் கேட்க, அதை எதிர்ப்பார்த்தால் பெரிய விஷயங்களைச் செய்யவியலாமல் போய்விடும் எனக் கூறுகிறான். ஆதிசங்கரரோ, விவேகானந்தனரோ தத்தம் பெற்றோரிடம் சம்மதத்துக்காகக் காத்திருக்கவில்லை என்றும் கூறுகிறான்.

சன்னியாசம் வாங்க ஏன் பெற்றோர் அனுமதி தேவை என சோவின் நண்பர் கேட்க, அது சம்பந்தமான யதார்த்தங்களை சோ ஆதி சங்கரர், மத்வர் ஆகியோரது உதாரணங்களுடன் விளக்குகிறார். சங்கரர் வேறுவழியில் அன்னையின் ஒப்புதலை பெற்றார் என்றும் கூறுகிறார்.

சாரியாரிடமும் அசோக் ஆசிகள் பெறுகிறான்.

நாதனும் வசுமதியும் பேசுகின்றனர். வசுமதி ரொம்பவும் மன உளைச்சலில் பேசுகிறாள். கோவிலுக்கு போய் ஒரு கல்லை ஏன் தெய்வம் என வணங்க வேண்டும் என்னும் அளவுக்கு பேச ஆரம்பிக்கிறாள். “அடாடா தெய்வ நம்பிக்கை போய் விட்டதே” என சோவின் நண்பர் குறிப்பிடுகிறார்.
(தேடுவோம்)

இந்த சீரியலை பொருத்தவரை எல்லா பாத்திரங்களுமே தத்தம் வேலையை கச்சிதமாக செய்கின்றனர். அசோக் ஒவ்வொரு வீட்டுக்கும் வரும்போதும் அவன் யாரை பார்க்க வருகிறானோ அவர் மட்டும் அசோக்குடன் பேச, மற்றவர்கள் தத்தம் வேலையை பார்க்கின்றனர். பம்மல் சம்பந்த முதலியார் தனது நாடக அனுபவங்களில் அதை பைப்ளே என்பார். மற்றவர்கள் அவல் மென்று கொண்டிருக்கக் கூடாது என்பார். இங்கு யாரும் அவல் மெல்லவில்லை. வெங்கட்டுக்கு ஒரு சபாஷ்.

எங்கே பிராமணன் பார்ட் - 2 ஜெயா டிவியில் வாரத்தில் திங்கள் முதல் வியாழன் முடிய (4 நாட்கள்) இரவு 8 முதல் 8.30 வரைக்கும்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

3 comments:

Krishnan said...

1. Can you tell me the books you intend to purchase at the 33rd Chennai Book Fair ?

2. Comment on BJP-Shibu Soren deal in Jharkhand.

3. Which do you think is the best book you read this year ?

வார்த்தை பிரயோகம் டோண்டுவால் மாற்றப்பட்டது said...

உங்கள் பதிவில் தான் ஒரு பெரியாரிஸ்ட் பூனூல் போடுவது இது பத்தினி வீடு என்று எழுதி மாட்டுவதற்குச் சமம் என்று சொன்னார்.

அதெல்லாம் இல்லை என்று பலர் விளக்கமளித்தார்கள்.
திருச்சிக்காரர் என்பவர் சிறப்பான விளக்கம் அளித்தார். ஆனால் பாருங்கள். பர்தா போட்டவள்தான் பத்தினி என்று ஓப்பனாக ஒரு பிரிவினர் சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். அங்கே போய் கேட்க அந்த பெரியாரிஸ்டுக்கு நேரம் கிடைக்கவில்லை.
ஏன் என்று நீங்கள் கேட்கக்கூடாதா?

tecksnippets said...

Good Blog to follow

 

Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது